Saturday, 11th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், பரமத்தியில் நடைபெற்ற புரட்டாசி விழாவில் ஸ்ரீ வெங்கடாஜலபதி திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.
பரமத்தி சவுராஷ்ட்ரா சபா மண்டபத்தில் புரட்டாசி விழாவை முன்னிட்டு, ஸ்ரீ அலமேலு மங்கையார் சமேத ஸ்ரீ வெங்கடாஜலபதி சுவாமிக்கு சிறப்பு அபிசேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.
தொடர்ந்து, வேத மந்திரங்கள் முழங்க சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. மணக்கோலத்தில் ஸ்ரீ வெங்கடாஜலபதி - ஸ்ரீ அலமேலு மங்கை பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
தொடர்ந்து மகா தீபாராதணை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசதாம் வழங்கப்பட்டது. பின்னர் சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். ஊர்வலத்தில் திரளான பெண்கள் கோலாட்டத்துடன் கலந்துகொண்டனர்.
இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை சவுராஷ்ட்ரா சபா மற்றும் ஸ்ரீ ரேணுகா தேவி அம்மன் குழுவினர் இணைந்து செய்திருந்தனர்.